ALAM SEKITAR & CUACA

இரண்டாம் வெள்ள அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் சிலாங்கூர்

29 டிசம்பர் 2021, 8:34 AM
இரண்டாம் வெள்ள அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் சிலாங்கூர்

ஷா ஆலம், டிச 29- சிலாங்கூர் வெள்ள அபாயம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறாத போதிலும் இரண்டாம் வெள்ள அபாய அலையை எதிர் கொள்ள மாநிலம் தயார் நிலையில் உள்ளது.

கிழக்கு கரை மாநிலங்கள் மற்றும் சபா,சரவாவில் இரண்டாம் வெள்ள அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மையில் மாநில அரசாங்க அதிகாரிகளுடன் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி நடத்தி சந்திப்பின் போது வெள்ள அபாயம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டதாக அவர் சொன்னார்.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கிட் சிலாங்கூர் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ள அபாயம் இல்லை என்ற தகவலை ஆறுதலை அளிப்பதாக இருந்தாலும் எத்தகைய விரும்பத்தகாத நிகழ்வையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அமிருடின் கூறினார்.

தொடர் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.