ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு RM1,000  உயிரிழந்த குடும்பத்திற்கு RM10,000,

21 டிசம்பர் 2021, 9:54 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு  RM1,000  உயிரிழந்த குடும்பத்திற்கு RM10,000,

ஷா ஆலம், டிச 21: சனிக்கிழமை தொடங்கி பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து (சிலாங்கூர் பாங்கிட்) சிலாங்கூர் எழுச்சி திட்டத்தைத் தொடங்குவதற்கு மாநில அரசு RM100 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது.

உள்கட்டமைப்பு மறுவாழ்வு மட்டுமின்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை கொண்ட குடும்பங்களுக்கு ரிம10,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்களை சரிசெய்வதற்காக குடும்பத் தலைவர்களுக்கு RM1,000 வழங்கவும் முடிவு செய்யப் பட்டது என்று அவர் விளக்கினார். “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மற்றும் சிலாங்கூர் அரசாங்கங்களிடமிருந்து RM2,000 பெறுவார்கள்.

தற்காலிக நிவாரண மையத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த உதவியைப் பெறுபவர்களை நாங்கள் வேறுபடுத்துவதில்லை. இன்று மாநில அரசின் அதிகாரபூர்வ நிர்வாக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "வீட்டில் இன்னும் இருப்பவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது, நாங்கள் அடையாளம் காண்போம்," என்று அவர் கூறினார்.

இதுவரை மொத்தம் 17 பேர் இறந்துவிட்டதாக அமிருடின் மேலும் கூறினார், அதாவது கிள்ளானில் 10 பேர், சிப்பாங்கில் நான்கு பேர், உலு லங்காட்டில் மீதமுள்ளவர்கள் மற்றும் இறப்புக்கான காரணம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. “வெள்ளம் காரணமாக மரணம் ஏற்பட்டதா அல்லது மருந்துப் பற்றாக்குறையா மற்றும் பலவற்றை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம்.

அவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், குடும்பத்தினர் பொறுமையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்," என்றார். இதற்கிடையில், கோலா சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்னும் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும், மீட்புப் பணிகள் இன்னும் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்கள் அந்தந்த வீடுகளில் தங்கியிருப்பதால், அவர்களுக்கு சமைக்க உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.