ECONOMY

வெள்ளத்தால் 14,000 க்கும் மேற்பட்டோர், சிலாங்கூரில் 4,596 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்.

19 டிசம்பர் 2021, 4:59 AM
வெள்ளத்தால் 14,000 க்கும் மேற்பட்டோர், சிலாங்கூரில் 4,596 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்.

கோலாலம்பூர், டிசம்பர் 19 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,000 க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர், பகாங்கில் இன்று காலை 5,189 பேர் வெளியேற்றப்பட்டனர்.

சமூக நலத்துறை (JKM) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பகாங்கில் உள்ள ரவுப், லிப்பிஸ், பெந்தோங், ஜெராண்டுட், மாரான், குவாந்தன் மற்றும் பெக்கான் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 9 மணி நிலவரப்படி 116 நிவாரண மையங்கள் செயல்படுகின்றன.

வெள்ளம் காரணமாக, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 1ஆம் கட்டம் (LPT1) வழியாக கிலோமீட்டர் (KM) 113.4, KM84.6, KM198.7 மற்றும் KM74.4 உள்ள சாலைகள் நீரில் மூழ்கிய பின்னர் இரு திசைகளிலும் மூடப்பட்டன, கனரக வாகனங்களின் பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது..நெடுஞ்சாலைச் பராமரிப்பு நிறுவனங்கள், ANIH Bhd, கோலாலம்பூருக்குச் செல்லும் KM66.4 முதல் KM66.1 வரையிலான பாதை இன்னும் சுத்தம் செய்யும் பணிக்காக மூடப்பட்டுள்ளது என்றும், நிலச்சரிவைத் தொடர்ந்து, KM67.8 மற்றும் KM69.5 ஆகியவை கூட்டரசு பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில், வெள்ளம் காரணமாக  வாகனங்களுக்கு  பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. அவைபெட்டாலிங் ஜெயா, வடக்கு கிள்ளான், சுங்கை பூலோ, சுபாங் ஜெயா, கோலா லங்காட், சிப்பாங் மற்றும் ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் அடங்கும் என்றார்.

இதற்கிடையில், சிலாங்கூரில் JKM போர்ட்டலின் படி, 4,596 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர் மற்றும் 55 நிவாரண மையங்கள் இன்று காலை 7 மணி நிலவரப்படி திறக்கப்பட்டுள்ளன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.