ECONOMY

97.3 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

12 டிசம்பர் 2021, 7:43 AM
97.3 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர் டிச 12- நாட்டிலுள்ள பெரியவர்களில்  97.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரத்து 882 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 98.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 811 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 89.7 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 24 ஆயிரத்து 847 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் 86.5 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 23 ஆயிரத்து 137 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 70,382 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 1,407 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 2,353 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 66,622 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. இது வரை ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 95 ஆயிரத்து 902 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.