கோலாலம்பூர், டிச 10 - நாட்டில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 52 ஆயிரத்து 434 பேர் அல்லது 97.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.மேலும் 98.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரத்து 502 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையோரில் 90.1 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 38 ஆயிரத்து 110 பேர் குறைந்தது ஓரு டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 86.8 சதவீதம் அல்லது 27 லட்சத்து 32 ஆயிரத்து 740 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மொத்தம் 140,831 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 7,332 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும், 4,708 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 128,791பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரத்து 414 ஆக உயர்ந்துள்ளது.
ECONOMY
97.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
10 டிசம்பர் 2021, 9:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




