ECONOMY

சிலாங்கூர் புத்தக விழா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது

8 டிசம்பர் 2021, 7:25 AM
சிலாங்கூர் புத்தக விழா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது

ஷா ஆலம், டிச 8- ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் சிலாங்கூர் புத்தக விழா 2021 கிருமி நாசினி தெளிப்பு பணிக்காக இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார தர நிர்ணய விதிகளை கடைபிடிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிக்கை ஒன்றில் கூறினர்.

நாளை தொடங்கி அந்த புத்தக விழா வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சிக் கூடங்களும் அங்குள்ள வசதிகளும் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய்த் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார இறுதியில்  வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதை கருத்தில் கொண்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் தாங்கள் செய்து வருவதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புத்தக விழாவில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். கண்காட்சிக் கூடத்தில் நுழைவதற்கு முன்னர் ஏற்பாட்டாளர்களும்  வர்த்தகர்களும் தினசரி கோவிட்-10 சுயப் பரிசோதனை செய்து கொள்வது உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.