ECONOMY

மலேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் சம்பவம் பதிவு

3 டிசம்பர் 2021, 5:37 AM
மலேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் சம்பவம் பதிவு

ஷா ஆலம், டிச 3- மலேசியாவில் முதலாவது ஓமிக்ரோன் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஈப்போவிலுள்ள தனியார் உயர்கல்விக்கூடத்தில் பயிலும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த மாணவருக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதி அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.