ECONOMY

97 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசி முழுமையாகப் பெற்றனர்

2 டிசம்பர் 2021, 4:53 AM
97 விழுக்காட்டுப் பெரியவர்கள் தடுப்பூசி முழுமையாகப் பெற்றனர்

ஷா ஆலம், டிச 2- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி வரை 97 விழுக்காட்டுப் பெரியவர்கள் அல்லது 2 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரத்து 593 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 89.4 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 34 ஆயிரத்து 279 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.2 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 12 ஆயிரத்து 550 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 89.8 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 24 ஆயிரத்து 704 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றனர்.

நேற்று நாட்டில் 142,607 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 7,347 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 4,744 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் மேலும் 130,516 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 இதன் வழி, பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரத்து 277 ஆக உயர்வு கண்டுள்ளது.

ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 90 ஆயிரத்து 730 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.