ECONOMY

சாலை சீராக்கப் பணி மக்களுக்கு பயன் தரும்- மேரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து

27 நவம்பர் 2021, 10:29 AM
சாலை சீராக்கப் பணி மக்களுக்கு பயன் தரும்- மேரு சட்டமன்ற உறுப்பினர் கருத்து

ஷா ஆலம், நவ 27- நடப்பிலுள்ள சாலைகளை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் வரவேற்றுள்ளார்.

சாலைகளை தரம் உயர்த்துவதற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதன் மூலம் மக்கள் குறிப்பாக மேரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் பயனடைவர் என்றார்.

சாலைகளை தரம் உயர்த்தும் பணி மேருவில் மட்டுமின்றி சபாக் பெர்ணம் வரை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அப்பகுதியில் மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளை உடனடியாக சீரமைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்பதோடு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வர இயலும் என்றார் அவர்.

நிர்வாகம் மற்றும் மேம்பாட்டிற்கு  முன்னுரிமை அளிக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள சாலைகளை சீரமைப்பதற்கு 6 கோடியே 54 லட்சம் வெள்ளி செலவிடப்படும் என்று நேற்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.