ECONOMY

கிள்ளான் ஆற்றின்  நீடித்த மேம்பாடு-26,000  வீடுகள் கட்டப்படும்

26 நவம்பர் 2021, 12:12 PM
கிள்ளான் ஆற்றின்  நீடித்த மேம்பாடு-26,000  வீடுகள் கட்டப்படும்

ஷா ஆலம் 26 நவ;-:  2022 ஆண்டு தொடங்கி  உருவாக்கப்படும் சுங்கை கிள்ளான் நீடித்த மேம்பாட்டுத் திட்டத்தில்   26, 000 வீடுகள்  கட்டப்படவிருப்பதாக  சிலாங்கூர் மந்திரிபுசார்  டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார்.

இதற்காக  சுங்கை கிள்ளான்  ஆற்று வழிதடப் பகுதியில் 56 கிலோமீட்டர் தூரத்திற்கு  அடுத்துவரும்  8 முதல்  10 ஆண்டுகளுக்கு  26,000 வீடுகள்  நிர்மாணிக்கப்படும்.   சுங்கை கிள்ளான் ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் அமல்படுத்தப்படும் மற்றொரு பொருளாதார திட்டமாக இது அமைவதாக  அமிருடின் ஷாரி  கூறினார்.

வாங்கக்கூடிய  விலையில்   2,000 வீடுகளும், சுதந்திரமான விலையில்   1,400 வீடுகளும் கட்டப்படும்  என அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அமிருடின் ஷாரி இத்தகவலை வெளியிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.