ECONOMY

இரண்டு கோடி வெள்ளி மதுபானங்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

14 நவம்பர் 2021, 2:53 AM
இரண்டு கோடி வெள்ளி மதுபானங்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

ஷா ஆலம், நவ 14- கோலக் கிள்ளான் மேற்கு துறைமுகத்தின் தீர்வைற்ற வர்த்தகப் பகுதியில் வரி உள்பட இரண்டு கோடி வெள்ளி மதிப்பைக் கொண்ட மதுபானங்களைக் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்தது.

கடந்த செப்டம்பர் 21 மற்றும் 27, நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் 627,510 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் அமலாக்கம் மற்றும் கண்காணிப்புத் துறை துணைத் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் வஹாபி அப்துல்லா கூறினார்.

கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1 கோடியே 85 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 21 லட்சத்து 11 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான  மதுபானங்களும் ஆகக் கடைசியாக கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 16 லட்சம் வெள்ளி மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

இந்த மதுபானக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயதுடைய உள்நாட்டு ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.