ECONOMY

79.6 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

14 நவம்பர் 2021, 2:48 AM
79.6 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 14- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 79.6 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 5 ஆயிரத்து 157 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 86.9 விழுக்காட்டு இளையோர் அல்லது 27 லட்சத்து 34 ஆயிரத்து 57 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, 95.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரத்து 520 பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ள வேளையில் 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 58 ஆயிரத்து 958 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 55,703 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி பெற்றவர்களில் 3,203 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 14,875 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் 37,625 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 11 லட்சத்து 38 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 938,437 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.