ECONOMY

ஹராப்பான் வேட்பாளர்களின் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட மந்திரி புசார் மலாக்கா பயணம்

13 நவம்பர் 2021, 3:42 AM
ஹராப்பான் வேட்பாளர்களின் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட மந்திரி புசார் மலாக்கா பயணம்

அலோர் காஜா13 நவ, மலாக்கா மாநில தேர்தலில் ஹராப்பான் வேட்பாளர்களின் தேர்தல் ஏற்பாடுகளைப் பார்வையிட சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  நேற்று மலாக்கா பயணம் மேற்கொண்டார்.

அந்த வரலாற்று மாநிலத்திற்கு மேற்கொள்ளும் இந்த ஒரு நாள் பயணத்தில் அவர் பல்வேறு நிகழ்வுகளில் இடைவிடாது கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் சுங்கை பெத்தாய் லுக்மானுல் ஹக்கிம் பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கானோருடன் வெள்ளிக் கிழமை தொழுகையில் கலந்து கொண்டார்.

இந்த தொழுகையில் கலந்து கொண்ட ரும்பியா தொகுதி வேட்பாளர் ஜம்ரி பக்கரியுடன் 30 நிடங்களை அவர் செலவிட்டார்.

மாலை 5.00 மணியளவில் அசகான் தொகுதியில் நடைபெற்ற  நிகழ்வொன்றில் அவர்  கலந்து கொண்டார்.

பின்னர் கம்போங் செபாத்து சமூக மண்டபத்தில் நடைபெற்ற  நிகழ்வில் சுங்கை ரம்பாய் தொகுதி வேட்பாளர் ஃபர்சானா ஹயானியுடன் கலந்து  கலந்து கொண்டார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்திலுள்ள 28 தொகுதிகளில் 495,195 வாக்காளர்கள் உள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.