ECONOMY

அமைச்சுகள் நிதி  நிர்வாக முறையை பின்பற்றாததால் நாட்டிற்கு 62 கோடி வெள்ளி இழப்பு

28 அக்டோபர் 2021, 6:33 AM
அமைச்சுகள் நிதி  நிர்வாக முறையை பின்பற்றாததால் நாட்டிற்கு 62 கோடி வெள்ளி இழப்பு

கோலாலம்பூர், அக் 28- நிதி நிர்வாக முறையை அமைச்சுகளும் அரசாங்கத் துறைகளும் சரிவர பின்பற்றாததால் நாட்டிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் 62 கோடியே 70 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

பணப்பட்டுவாடா நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படாததால் 51 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சான்று பெறாத பராமரிப்பு பணிக்கான நிதி கோரிக்கை தொடர்பில் 49 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியும் இழப்பு ஏற்பட்டதாக தேசிய தலைமை கணக்காய்வாளர் டத்தோ நிக் அஸ்மான் நிக் அப்துல் மஜிட் கூறினார்.

இதனிடையே, பொது இழப்பை உட்படுத்திய 10 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி தொகையில் 8 கோடியே 16 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி குடிநுழைவுத் துறையினால் இன்னும் விதிக்கப்படாத மற்றும் கோரப்படாத அபராதத் தொகையும் அடங்கும் என அவர் சொன்னார்.

இதில் மேலும் 47 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி இழப்பு இஸ்தானா புடாயாவுக்கு இன்னும் தருவிக்கப்படாத மற்றும் பொருத்தப்படாத உபகரணங்களால் ஏற்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களைவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் அமைச்சுகள், அரசு துறைகளின் மதிப்பீட்டு தணிக்கை அறிக்கைகள் தொடர்பில் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.