ECONOMY

94.7 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்

26 அக்டோபர் 2021, 9:06 AM
94.7 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்

கோலாலம்பூர், அக். 26 - நேற்று இரவு 11.59  மணி வரை  2 கோடியே  21 லட்சத்து 66 ஆயிரத்து 333 பேர் அல்லது 94.7 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட் –19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து  13 பேர் அல்லது 97.5 பெரியவர்கள் குறைந்தது  முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் கோவிட் நாவ் (covidnow) இணைய முகப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேற்று மொத்தம் 184,162 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.  அவர்களில்  140,054 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகவும் 21,927 பேர் முதல் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். இது தவிர, 22,181 பேர் ஊக்கத் தடுப்பூசியை (பூஸ்டர்)  பெற்றுள்ளனர்.

இதன் மூலம், பிக் (Pick) எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை  4 கோடியே  92 லட்சத்து  53 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரையில் சுமார் 17 லட்சத்து 39 ஆயிரத்து 835 பேர் அல்லது 55.3 விழுக்காட்டு 12  முதல் 17 வயது வரையிலான பதின்ம வயதினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டனர். 25 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் அல்லது 81.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.