NATIONAL

கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 7,950 ஆக உயர்வு

13 அக்டோபர் 2021, 9:37 AM
கோவிட்-19 தினசரி எண்ணிக்கை 7,950 ஆக உயர்வு

ஷா ஆலம், அக் 13- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றைவிட சற்று உயர்ந்து 7,950 ஆனது. நேற்று பதிவான நேர்வுகளின் எண்ணிக்கை 7,276 ஆகும்.

இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 61 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நேற்று 10,555 பேர் இந்நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

இதன்வழி, மொத்தம் 22 லட்சத்து 17 ஆயிரத்து 057 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.