ECONOMY

200 குடியிருப்பாளர்கள் தடுப்பூசி பெற ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் உதவி

11 அக்டோபர் 2021, 1:27 AM
200 குடியிருப்பாளர்கள் தடுப்பூசி பெற ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், அக் 11-கோவிட்-19 தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபட்ட லெம்பா சுபாங்கை சேர்ந்த 200 பேர் தடுப்பூசி பெறுவதற்கு ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் உதவ முன்வந்துள்ளார்.

பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேரமின்மை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் லெம்பா சுபாங் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பலர் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்ற புகார் கிடைக்கப்பெற்றதன் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இயக்கத்தின் போது அந்த 200 பேருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்.

ஆரா டாமன்சாராவிலுள்ள என்.இஸட்.எக்ஸ். வர்த்தக மையத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.