கோலாலம்பூர், அக் 7- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 9,380 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 9,380 ஆக இருந்தது.
சிலாங்கூரில் நேற்று 1,116 ஆகப் பதிவான கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 1,402 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாக கூறினார்.
நாட்டில் மிக அதிகமாக கோவிட்-19 நோய்த் தொற்றை பதிவு செய்த மாநிலமாக சரவா விளங்குகிறது. இம்மாநிலத்தில் இன்று 1,413 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் கிளந்தானில் 1,032 பேரும் ஜொகூரில் 993 பேரும் பாதிக்கப்பட்டனர்.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- சபா (820), பேராக் (794), பினாங்கு (721), திரங்கானு (699), பகாங் (564), கெடா (503), மலாக்கா (260), கோலாலம்பூர் (250), பெர்லிஸ் (200), நெகிரி செம்பிலான் (180), புத்ரா ஜெயா (59), லபுவான் (0).








