NATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 9,380 ஆகப் பதிவு- சிலாங்கூரில் 1,116 நேர்வுகள்

6 அக்டோபர் 2021, 11:39 AM
கோவிட்-19 எண்ணிக்கை இன்று 9,380 ஆகப் பதிவு- சிலாங்கூரில் 1,116 நேர்வுகள்

ஷா ஆலம், அக் 6-  நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 9,380 ஆக உயர்ந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 8,817 ஆக இருந்தது.

சிலாங்கூரில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 200 பேர் அதிகரித்து 1,116 ஆக ஆனது. நேற்று இந்த  மாநிலம் 1,348 சம்பவங்களைப் பதிவு செய்திருந்தது.

சரவா மாநிலத்தில் நேற்று 1,361 ஆக இருந்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 1,503 ஆக உயர்ந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கை கூறியது.

நான்கு இலக்க நோய்த் தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்த மாநிலங்களாக கிளந்தான் (1,170) மற்றும் ஜொகூர் (1,105) விளங்குகின்றன

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- சபா (790), திரங்கானு (704), பேராக் (629), பினாங்கு (623), கெடா (556), பகாங் (511), கோலாலம்பூர் (214), மலாக்கா (200), நெகிரி செம்பிலான் (191), பெர்லிஸ் (42), புத்ரா ஜெயா (18), லபுவான் (8).

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.