ECONOMY

மலேசியர்களில் 69 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

7 செப்டெம்பர் 2021, 7:32 AM
மலேசியர்களில் 69 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், செப் 7- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில்  68.8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 61 லட்சத்து 7 ஆயிரத்து 712 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 3 கோடியே 13 லட்சத்து 37 ஆயிரத்து 751 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேசிய  கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று நாடு முழுவதும் 313,751 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 181,111 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக அது கூறியது.

கடந்த திங்கள்கிழமை வரை 88.3 விழுக்காட்டு மலேசியர்கள் அல்லது 2 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 827 பேர்  முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.