ECONOMY

68 விழுக்காட்டு மலேசியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

6 செப்டெம்பர் 2021, 7:48 AM
68 விழுக்காட்டு மலேசியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், செப் 6- நாட்டில் நேற்று வரை 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 68 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 601 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடியே 64 லட்சத்து 31 ஆயிரத்து 562 தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு தனது  டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய கேன்சினோ தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் உள்பட நாட்டில் 1 கோடியே 543, 016 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது கூறியது.

இதனிடையே, நேற்று நாடு முழுவதும் 289,958 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 136,177 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 153,841 பேர் இரண்டாது தடுப்பூசியையும் பெற்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.