NATIONAL

உயர்கல்விக் கூடங்களுக்கான விண்ணப்ப முடிவுகளை இன்று பிற்பகல் முதல் தெரிந்து கொள்ளலாம்

15 செப்டெம்பர் 2021, 4:28 AM
உயர்கல்விக் கூடங்களுக்கான விண்ணப்ப முடிவுகளை இன்று பிற்பகல் முதல் தெரிந்து கொள்ளலாம்

ஷா ஆலம், செப் 15- எஸ்.டி.பி.எம். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி கொண்ட மாணவர்கள் 2021/2022 ஆம் கல்வி தவணையில் அரசாங்க உயர்கல்விக் கூடங்களில்  நுழைவதற்கு செய்த விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை இன்று  நண்பகல் 12.00 மணி முதல் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முடிவுகளை இம்மாதம் 25 ஆம் தேதி வரை கீழ்க்கண்ட அகப்பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். 

 https://jpt.utm.my; http://jpt.uum.edu.myhttps://jpt.unimas.myhttp://jpt.ums.edu.my  http://jpt.umt.edu.my

விண்ணப்பங்களை ஏற்பது மற்றும் ஒப்புதல் தொடர்பான கடிதங்களை இம்மாதம் 25 ஆம் தேதிக்குப் பின்னர் பொது உயர்கல்விக்கூட அகப்பக்கத்திலிருந்து பிரதியெடுத்துக் கொள்ளலாம் என்று உயர்கல்வியமைச்சு கூறியது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு ஒப்புதல் கடிதங்களை பொது பல்கலைக்கழகத் தரப்பு நாளை முதல் வெளியிடும் என்றும் அந்த விண்ணப்பத்தை ஏற்பது தொடர்பில் மாணவர்கள் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே மேல் முறையீடு செய்ய முடியும். மேல் முறையீட்டு விண்ணப்பத்தை  https://upu.mohe.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக இம்மாதம் 15ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 11 நாட்களில் அனுப்ப வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.