ECONOMY

நாட்டில் 62.6 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

30 ஆகஸ்ட் 2021, 7:42 AM
நாட்டில் 62.6 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஆக 30- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில் 62.6 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 46 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று வரை தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழு கூறியது.

நாட்டு மக்களில் 1 கோடியே 93 லட்சத்து 89 ஆயிரத்து 392 பேர் அல்லது 82.8 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அந்த பணிக்குழு தெரிவித்தது.

இதன் வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் (பிக்) வழி தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 27 ஆயிரத்து 548 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்று நாடு முழுவதும் மொத்தம் 302,804 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 142,186 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 160,618 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.