ஷா ஆலம், 26 ஆக: பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகஸ்ட் 25 அன்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் உட்பட மூன்று அரசியல் பிரமுகர்களுடன் எட்டு - கண் சந்திப்பை நடத்தினார்.
பக்காத்தான் ஹரப்பான் (பக்காத்தான்) தலைவர் தவிர, இஸ்மாயில் பார்டி அமானா நெகாரா தலைவர் முகமது சாபு மற்றும் ஜசெக பொது செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரை பிரதமர் புத்ராஜெயா அலுவலகத்தில் சந்தித்தார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அவர்கள் நாடாளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்துவது உள்ளிட்ட நிறுவன சீர்திருத்தங்களைச் செயல்படுத்த ஒருமித்த கருத்தை எட்டினார்கள்.
"மலேசிய கலாச்சாரப்படி, மக்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் சாதகமான சூழலை உறுதி செய்வதற்காக நீதித்துறை, நிறுவன சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், புரிந்து கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய மீட்சி கவுன்சில் (MPN) மற்றும் கோவிட் -19 ஐ சமாளிக்கும் சிறப்பு குழுவில் சேர ஆகஸ்ட் 22 அன்று தனது தொடக்க உரையில் இஸ்மாயிலின் அழைப்பை பரிசீலிப்பதாக பக்காத்தான் கூறியது.
இருப்பினும், பக்காத்தான் தலைத்துவ கவுன்சில், அதில் பங்கேற்பது அரசாங்கத்தின் பார்வையில் ஒரு வலை அல்லது ஆமாம் சாமி கலாச்சாரமில்லை ("ரப்பர் ஸ்டாம்ப்" அல்ல), மாறாக தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார மந்தநிலையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாகும்.
கவுன்சிலின் அறிக்கையில், கூட்டணி ' 18 வயதில் வாக்காளர்' வாக்குறுதியை அமல்படுத்துதல் மற்றும் 'கட்சித்தாவும் எதிர்ப்பு சட்டத்தை இயற்றுவது' உட்பட நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்துவது உட்பட நிறுவன சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிப்பது.
கோவிட் -19, பொருளாதாரத்தை புத்துயிர் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்பான கொள்கைகளுக்கு ஏற்ப மாற்று திட்டங்களை முன்வைக்க பக்காத்தான் தயாராக உள்ளது.
"ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான விமர்சனங்கள், பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு பயனுள்ள எதிர்க்கட்சியாக மாறுவதையே பக்காத்தானின் கவனம் இருக்கும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகளைத் தவிர, தற்போதைய அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பையும் மூன்று கட்சி கூட்டணி திட்டமிட்டுள்ளது.
அதில் புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்க முந்தைய சிறப்பு அமர்வின் முடிவு, ஆகஸ்ட் 23 அன்று டத்தோ அசலினா ஓத்மான் சையத் ராஜினாமா செய்த பிறகு (டேவான் ராக்யாட்)மக்களவை துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது போன்ற விஷயங்களிலும் கூட்டணிக்வகட்சிகளின் தலைமைத்துவம் கவனம் செலுத்தும்.
ECONOMY
பக்காத்தான் தலைவர்கள் நோய்தொற்று, பொருளாதார மலர்ச்சி, நாடாளுமன்ற,நீதித்துறை, நிறுவன சீர்திருத்தம் மற்றும் நல்லாட்சிக்காக பிரதமரை சந்தித்தனர்.
26 ஆகஸ்ட் 2021, 4:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




