ECONOMY

தொற்றுநோய் இந்த ஆண்டு மாநில அரசின் வருவாயின் வசூலையும் பாதித்துள்ளது

24 ஆகஸ்ட் 2021, 8:11 AM
தொற்றுநோய் இந்த ஆண்டு மாநில அரசின் வருவாயின் வசூலையும் பாதித்துள்ளது

ஷா ஆலம், 24 ஆக ; கோவிட் -19 தொற்றுநோயால் மாநிலத்தின் பெரும்பாலான பொருளாதாரத் துறைகள் வளர்ச்சியில் எதிர்மறையான பதிவுகளை செய்த வேளையில் சேவைத் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது (எம்சிஓ) தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகள் மாநிலத்தின் பெரும்பாலான பொருளாதாரத் துறைகளை மோசமாகப் பாதித்துள்ளன.

"தொழில்துறை மற்றும் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் விவசாயம் ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதார துறைகள். "இருப்பினும், இ-ஹெயிலிங் மற்றும் பிற சேவைகள் போன்ற சேவைகள் துறை MCO அமலாக்கத்திலிருந்து நேர்மறையான தாக்கத்தைக் காட்டியது," என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.

தொற்று நோய்களின் போது விநியோகம் போன்ற சேவை துறைகள் மிக துடிப்பாக செயல் பட்டதே  காரணம் என்று சுங்கை துவா மாநில சட்டமன்ற உறுப்பினரான அமிருடின்  கூறினார்.

சுங்கை புரோங் மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஷம்சுதீன் லியாஸ் சிலாங்கூரில் மோசமான பொருளாதார தாக்கம் குறித்த வாய்வழி கேள்விக்கு பதிலளித்த போது, ​​"மோசமான பொருளாதார நேரத்தில் நாம் பொருட்களை அனுப்புவது மற்றும் வினியோகத்துறையின் சேவைகள் அப்போது ஒரு தீர்வாக மாறியுள்ளது.

தொற்றுநோய் இந்த ஆண்டு மாநில அரசின் வருவாயின் வசூலையும் பாதித்துள்ளது என்று அமிருதீன் கூறினார். "இந்த ஆண்டு ஆகஸ்ட் 20 நிலவரப்படி, சிலாங்கூர் 2021 க்கு RM1.53 பில்லியன் அல்லது எங்கள் இலக்கு வருமானமான RM2.2 பில்லியனில் 69.57 சதவீதத்தை வெற்றிகரமாக வசூலித்துள்ளது.

"கடந்த ஆண்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், அரசு 100 சதவிகிதத்தை வசூலிக்க முடிந்தது, ஏனென்றால் MCO அமல்படுத்தப்படுவதற்கு முதல் மூன்று மாதங்களில் நாங்கள் இலக்கு வைக்கப்பட்ட RM2.2 பில்லியன் வருவாயில் 50 சதவிகிதத்தை சேகரித்தோம்," என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தொற்றுநோய்களின் போது மாநிலத்தின் வருவாய் சேகரிப்பு செயல்முறை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு பல நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளதாக அமிருடின் கூறினார்.

மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் டிராப் பாக்ஸை அமல்படுத்தியுள்ளோம், அத்துடன் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து, மாநிலத்தின் வருவாய் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் தாக்கத்தை குறைத்துள்ளோம், என்றார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.