ECONOMY

நாட்டில் 55 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

23 ஆகஸ்ட் 2021, 4:07 AM
நாட்டில் 55 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஆக 23- நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களில்  55.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரத்து 246 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று வரை பதிவான தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத  சிறப்பு பணிக்குழு தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று வரை 1 கோடியே 82 லட்சத்து 58 ஆயிரத்து 947 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கூறிய அப்பணிக்குழு, இதன் வழி நாட்டில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி 3 கோடியே 12 லட்சத்து 81 ஆயிரத்து 193 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 441,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 303,545 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.