ECONOMY

பிபிவி கெனாங்கா இன்று மூடப்படுகிறது, இரண்டாவது டோஸ் பெறுபவர்கள் ஐடியல் பிபிவிக்கு செல்ல வேண்டும்

23 ஆகஸ்ட் 2021, 2:42 AM
பிபிவி கெனாங்கா இன்று மூடப்படுகிறது, இரண்டாவது டோஸ் பெறுபவர்கள் ஐடியல் பிபிவிக்கு செல்ல வேண்டும்

 ஷா ஆலம், 22 ஆக: ஷா ஆலம் செக்சன் 28 இல் உள்ள டேவான் கெனாங்காவில் உள்ள தடுப்பூசி மையம் (பிபிவி) இன்று முதல் மூடப்படுகிறது என்று ஷா ஆலம் மாநகர சபை (எம்பிஎஸ்ஏ) தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த பிபிவியில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெறுபவர்கள் ஷா ஆலம் செக்சன் 15ல் உள்ள பிபிவி ஐடியல் கன்வென்ஷன் சென்டருக்கு (ஐடிசிசி) மாற்றப்படுவார்கள்.

பிபிவி கெனாங்கா தவிர, பிபிவி (டேவான் கொமுனிட்டி) செரண்டா சமூக மண்டபமும் இன்று மூடப்படுகிறது. பத்தாங் காளி மாநில சட்டமன்ற (DUN) ஒருங்கிணைப்பாளர் மக்கள் சேவை மையம், இன்று செரண்டா சமூக மண்டபத்தில் PPV பதிவு செய்துக்கொண்ட நபர்களை ஆகஸ்ட் 24 ம் தேதி அன்று புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் கிளப் PPV யில் தடுப்பூசி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் இன்போகிராஃபிக்ஸ் பகிர்வின் மூலம், பிபிவி புக்கிட் பெருந்தோங் கோல்ஃப் கிளப் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் செயல்முறைக்காக இன்று திங்கட்கிழமை ஒரு நாளுக்கு மூடப்படும்  என்று அறிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.