ECONOMY

மக்கள் தொகையில் 38 சதவிகிதம் அல்லது 12,408,803 தனிநபர்கள், தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துள்ளனர்

21 ஆகஸ்ட் 2021, 6:42 AM
மக்கள் தொகையில் 38 சதவிகிதம் அல்லது 12,408,803 தனிநபர்கள், தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துள்ளனர்

கோலாலம்பூர்,  21 ஆக- நேற்றைய நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 38 சதவிகிதம் அல்லது 12,408,803 தனிநபர்கள், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் முடித்துள்ளனர் என்று கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் கண்கானிப்பு உத்தரவாத சிறப்பு குழு (JKJAV) தெரிவித்துள்ளது.

குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு விளக்கப்படம், 17,961, 600 தனிநபர்கள் அல்லது 55 சதவிகிதம், தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். இது தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த தடுப்பூசி  அளவுகள் 30,370,403 ஆகிறது.

தினசரி தடுப்பூசியில், 483,855 டோஸ் தடுப்பூசி நேற்று வழங்கப்பட்டது, முதல் டோஸாக 155,030 டோஸ், இரண்டாவது டோஸ் பெறுபவர்களுக்கு 328,825 டோஸ். நாட்டில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடந்த பிப்ரவரி 24 அன்று PICK தொடங்கப்பட்டது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.