ECONOMY

28.3 விழுக்காட்டு  மலேசியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

11 ஆகஸ்ட் 2021, 5:26 AM
28.3 விழுக்காட்டு  மலேசியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

 நாட்டில் நேற்று வரை 28.3 விழுக்காட்டு மலேசியர்கள் அல்லது 92 லட்சத்து 46 ஆயிரத்து 295 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் 

தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் அடங்கிய விளக்கப்படத்தை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  ஆடாம் பாபா தனது  டிவிட்டர் பக்கத்தில்  பகிர்ந்து கொண்டார்.

இதுவரை 1 கோடியே 61 லட்சத்து 19 ஆயிரத்து 916 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றள்ளதாக கூறிய அவர், பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை  2 கோடியே 53 லட்சத்து 66 ஆயிரத்து 211 ஆகும் என்றார்.

விகிதார அடிப்படையில் பார்க்கையில் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 68.9 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 39.5 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

நேற்று நாட்டில் 357,891 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் அவர்களில் 160,320 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 197,661 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றனர் என்று அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.