ECONOMY

சிலாங்கூரில் பாதிக்கும் மேற்பட்ட தொற்று மையங்கள் தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை

10 ஆகஸ்ட் 2021, 5:47 AM
சிலாங்கூரில் பாதிக்கும் மேற்பட்ட தொற்று மையங்கள் தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை

ஷா ஆலம், ஆக 10- சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்று மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உற்பத்தி துறை சம்பந்தபட்டவை என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்த தொற்று மையங்களில் 96 அல்லது 54 விழுக்காடு தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை என்பதை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

மேலும் 22 தொற்று மையங்கள் அல்லது 12 விழுக்காடு சேவைத் துறை வாயிலாகவும் 9 தொற்று மையங்கள் பொது மக்கள் மத்தியிலிருந்தும் பரவின என்றார் அவர்.

விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத அணுகுமுறையை சுகாதார இலாகா மேற்கொண்டு வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

மருத்துவம் சார்ந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக 3,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் செர்டாங்,மேப்ஸ் விவசாய கண்காட்சி மையத்தில் உள்ள பி.கே.ஆர்.சி. தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது என்றார் அவர்.

மருத்துவம் சாராத அணுகுமுறையின் கீழ் மாநிலத்தில் 27 கோவிட்-19 மதிப்பீடு மையங்களும் (சி.ஏ.சி.) ஒரு இயங்கலை மதிப்பீட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.