ECONOMY

கோவிட்-19 பெருந்தொற்று -குறைந்து வருகிறது , இன்று 17,236 சம்பவங்களே!

9 ஆகஸ்ட் 2021, 9:49 AM
கோவிட்-19 பெருந்தொற்று -குறைந்து வருகிறது , இன்று 17,236 சம்பவங்களே!

ஷா ஆலம், ஆக 9- நாட்டில் கோவிட்-19 தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,236 ஆக பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை  18,688 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 6,565 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று 825 குறைந்து 5,740 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூரிலும் இந்த எண்ணிக்கை 1,883இல் இருந்து 1,567 ஆக குறைந்துள்ளது. கெடா, சபா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்கள் முறையே 1,328, 1,247 மற்றும் 1,232 ஆகிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன.

எனினும் நெகிரி செம்பிலானில் நோய் கண்டவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து 1,215 ஆக பதிவாகியுள்ளது. பெர்லிசிலும் நேற்று ஆறாக இருந்த நோய்த தொற்று எண்ணிக்கை இன்று 22 ஆக அதிகரித்துள்ளது.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு- பேராக் (935), கிளந்தான் (914), பினாங்கு (908), பகாங் (604), சவரா (589), திரங்கானு (501(, மலாக்கா (360), புத்ரா ஜெயா (66), லபுவான் (8).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.