ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்றினால்  நேற்று  16,840 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் 6,092 நேர்வுகள் பதிவு

30 ஜூலை 2021, 4:05 PM
கோவிட்-19 நோய்த் தொற்றினால்  நேற்று  16,840 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் 6,092 நேர்வுகள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 31- நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை  நேற்று  சற்று தணிந்து 16,840 ஆனது. நேற்று முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 17,170 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று முந்தைய நாள் 7,163 ஆக இருந்த நோய்த் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  நேற்று சுமார் ஆயிரம் குறைந்து 6,092 ஆக ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூர், கெடா, ஜொகூர் ஆகிய மாநிலங்கள் முறையே 2,114, 1,281 மற்றும் 1,104 கோவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்த தாக அவர் தனது டிவிட்டர் பதில் கூறியுள்ளார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு-

நெகிரி செம்பிலான் (1,079), சபா (1,066), பேராக் (810), பினாங்கு (689), கிளந்தான் (656), மலாக்கா (581), பகாங் (540), சரவா (450), திரங்கானு (258), புத்ரா ஜெயா (100), பெர்லிஸ் (13), லபுவான் (7).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.