ECONOMY

இன்று 17,170 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 7,163 பேருக்கு நோய்த் தொற்று

29 ஜூலை 2021, 9:06 AM
இன்று 17,170 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- சிலாங்கூரில் 7,163 பேருக்கு நோய்த் தொற்று

கோலாலம்பூர், ஜூலை 29- நாட்டில் கோவிட்-19  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 17,170 ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 17,405 ஆக இருந்தது.

சிலாங்கூரில் நேற்று 7,171 ஆக இருந்த நேர்வுகளின் எண்ணிக்கை இன்று ஆறு குறைந்து 7,163 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூரில் 2,138 சம்பவங்களும் கெடாவில் 1,212 சம்பவங்களும் ஜொகூரில் 1.054 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு-

நெகிரி செம்பிலான் (884), சபா (776), பகாங் (638), கிளந்தான் (615), பேராக் (596), சரவா (582), பினாங்கு (544), திரங்கானு (437), மலாக்கா (416), புத்ரா ஜெயா (84), லபுவான் (11), பெர்லிஸ் (10).

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.