MEDIA STATEMENT

மேரு வட்டாரத்தில் புயல்- 20 வீடுகள் சேதம்

18 ஜூன் 2021, 8:17 AM
மேரு வட்டாரத்தில் புயல்- 20 வீடுகள் சேதம்

ஷா ஆலம், ஜூன் 18- மேரு வட்டாரத்தில்  நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயலுடன்  கூடிய அடைமழையில்  இருபது வீடுகள் சேதமடைந்தன.

கனத்த மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேறோடு சாய்ந்ததோடு பல வீடுகளின் கூரைகள் பறந்து  80 விழுக்காடு வரை சேதமடைந்ததாக  மேரு  சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

ஜாலான் ஜம்பு, தாமான் மேரும் 3, தாமான் டேசா பெர்மாய், ஜாலான் ஹம்சா ஆலாங், கம்போங் புடிமான், ஜாலான் நெனாஸ் மற்றும் ஜாலான் லீமாவ் ஆகிய பகுதிகள் புயல் காற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்கள் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயம் கருதி வேறு இடங்களுக்குச் செல்லாமல் அதே வீடுகளில் தங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்யும் அதே வேளையில் சேதமடைந்த வீடுகளை சரி செய்வதற்கும் உதவி வழங்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே, இந்த புயல் சம்பவம் தொடர்பாக தாங்கள்  18 புகார்களைப் பெற்றுள்ளதாக  வட கிள்ளான் மாவட்ட  போலீஸ் தலைவர் ஏசிபி நுருள்ஹூடா முகமது சாலே கூறினார்.

எனினும், மேரு வட்டாரத்தில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் காயம் அல்லது உயிருடற் சேதம் யாருக்கும் ஏற்படவில்லை என்றார் அவர்.

 

.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.