கோலாலம்பூர், ஜூன் 8- பெருந்தொற்று காலத்தில் சுமார் 57 விழுக்காட்டு மலேசியர்கள் பொருள்களை இணையம் வழி வாங்குவது கோவிட்-19 நோய்த் தொற்று மீதான ஜூவாய் ஐகியூஐ நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு முன்பு இருந்த தைவிட இப்போது அதிகமானோர் பொருள்களை வாங்குவதற்கு இணைய சேவையை பயன்படுத்துவதை இது காட்டுகிறது. இதன் வழி நாட்டில் இணைய வர்த்தகம் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.
லஸாடா மலேசியாவின் புதிய இணைய விற்பனையாளர்களின் எண்ணிக்கை 300 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஜூவாய் ஐகியூஐ குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரிக காசிஃப் அன்சாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.
பெருந்தொற்று காலத்தில் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் சில்லறை வியாபாரம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக பேங்க் நெகாரா கூறுகிறது. கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது அதிகமானோர் இணையம் வழி பொருள் வாங்குவதற்கு அதிகம் செலவிடுவதை எங்களின் தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.
இணையம் வழி பொருள்கள் வாங்கும் நடவடிக்கைகள் அதிகரித்த தன் வழி இதர பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சி கண்டு ரொக்கமில்லா வணிகம் வளர்ச்சி காண்பதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








