MEDIA STATEMENT

ஊழலைத் தடுக்க பணிக்கு ஆள் சேர்ப்பதில் கடும் கட்டுப்பாடுகள்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நடவடிக்கை

4 மே 2021, 6:14 AM
ஊழலைத் தடுக்க பணிக்கு ஆள் சேர்ப்பதில் கடும் கட்டுப்பாடுகள்- பெ.ஜெயா மாநகர் மன்றம் நடவடிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 4- ஊழல் மற்றும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக அரசு பணிக்கு புதிதாக  ஆள் சேர்ப்பதில் கடுமையான  கட்டுப்பாடுகளை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் விதிக்கவுள்ளது.

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு பணி நெறி மற்றும் தனித்துவ பண்புகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

அதிகாரமும் பொறுப்பும் வழங்கப்பட்ட அரசு பணியாளர் நேர்மையாகவும் சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டும் கடமையாற்ற வேண்டும என்று அவர் வலியுறுத்தினார்.

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் விஷயத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது எனக் கூறிய அவர், அத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் அமலாக்க நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.

கடுமையான குற்றச்செயல்கள் அல்லது ஊழலில் ஈடுபடுவோர் அல்லது அத்தகைய குற்றங்களை மீண்டும் புரிவோருக்கு எதிராக வேலை நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஊழல் தொடர்பில் கடந்த 2015 முதல 2020 வரை கைதான 5,652 பேரில் 2,683 பேர் அரசு ஊழியர்கள் என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.