ஷா ஆலம், பிப் 8- கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான முழுமையான நடப்பு புள்ளி விவரங்களை சிலாங்கூர் அரசு பழையபடி மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளும்.சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இவ்விவகாரம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இருதரப்புக்கும் இடையிலான தரவு பரிமாற்றம் முறையாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசின் செலங்கா செயலியில் உள்ள தகவல்களை
மைசெஜாத்ரா செயலிக்கு மாற்றுவது மட்டுமின்றி இருதரப்புக்கும் இடையே பரஸ்பர தகவல் பரிமாற்றத்தையும் இந்த நடவடிக்கை உள்ளடக்கியிருக்கும் என்று அவர் மேலும்.
இதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இது உண்மையில் செயலாக்கம் காணும் என்று நம்புவோம். அடுத்தக்கட்ட திட்டமிடலுக்கு இந்த தரவு பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றார் அவர்.
NATIONAL
கோவிட்-19 தரவுகள் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும்- மந்திரி புசார் தகவல்
8 பிப்ரவரி 2021, 7:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



