NATIONAL

சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு

28 டிசம்பர் 2020, 1:02 PM
சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஷா ஆலம், டிச 28- இம்மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருவதாக இருந்த நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டதைத் தொடர்ந்து பொது முடக்கத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கோலாலம்பூர் மற்றும் சபாவிலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்பு சபாக் பெர்ணம் மாவட்டம் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையிலிருந்து  விலக்களிக்கப்பட்டிருந்தது. அம்மாவட்டமும் இப்போது சிவப்பு மண்டலமாக மாறிவிட்டது. ஆகையால் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய பொது முடக்கத்தை அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் அதிகரிப்பு காரணமாக சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சிவப்பு மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.