ஷா ஆலம், டிச 9- குழாய்கள் உடைவது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெருமளவு குறைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.அக்காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பழைய குழாய்களை மாற்றும் பணிகளே புகார்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று அவர் சொன்னார்
கடந்த 2016 ஆம் ஆண்டில் 5,000 ஆக இருந்த அத்தகைய புகார்களின் எண்ணிக்கை
கடந்த 2019 ஆம் ஆண்டில் 2,000 ஆக குறைந்துள்ளதாக அவர் சொன்னார்.
நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் சேகரிப்பு குளங்கள் மற்றும் குழாய்களை பழுது பார்க்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக கடந்த 2016 ஆகஸ்டு மாதம் முதல்
இவ்வாண்டு வரை 180 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையின் வாயிலாக பயனற்று போகும் நீரின் அளவையும் குறைக்க முடிந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு 31.6 விழுக்காடாக இருந்த பயனற்று போகும் நீரின் அளவு தற்போது 29.6 விழுக்காடாக குறைந்துள்ளது என்றார் அவர்.
SELANGOR
குழாய்கள் உடைவது தொடர்பில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறைவான புகார்கள்
9 டிசம்பர் 2020, 12:47 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘BRAIS 2026’ புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
17 மே 2026

selangor
ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
17 மே 2026

national
அமெரிக்க நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள சிலாங்கூர்: 22 உலகளாவிய நிறுவனங்களுடன் மந்திரி புசார் சந்திப்பு
Shalini Rajamogun
15 மே 2026

selangor
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாகச் சிலாங்கூர் விளங்குகிறது
Shalini Rajamogun, Adam Azman
15 மே 2026

உங்கள் கருத்து என்ன?


