NATIONAL

அரசாங்கம் பல கடுமையான எஸ்ஓபிகளை அமல்படுத்த இருக்கிறது !!!

25 ஜூலை 2020, 8:36 AM
அரசாங்கம் பல கடுமையான எஸ்ஓபிகளை அமல்படுத்த இருக்கிறது !!!

புத்ராஜெயா, ஜூலை 25

 

கடந்த சில தினங்களில் தொடர்ந்து கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து பல கடுமையான சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அதோடு, ஜூலை 31-ஆம் தேதி கொண்டாடப்படும் தியாகத் திருநாளுக்கான எஸ்ஓபி குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார். தற்போது அதிகரித்து வரும் இப்பெருந்தொற்றை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.

குறிப்பாக, சரவா மாநிலத்தில் பதிவாகியுள்ள 40-க்கும் மேற்பட்ட நோய் சம்பவங்களை அவர் சுட்டிக் காட்டினார். தியாகத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து, நாளை ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்பக் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மூத்த அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். திங்கட்கிழமை அறிவிக்கப்படும் புதிய எஸ்ஓபி-யை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய தியாகத் திருநாள் முழுவதும் போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.