NATIONAL

டிஎன்பி: மின்சாரக் கட்டணக் கழிவு டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும்

2 ஜூலை 2020, 12:23 PM
டிஎன்பி: மின்சாரக் கட்டணக் கழிவு டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும்

புத்ராஜெயா, ஜூலை

தெனாகா நேஷனல் நிறுவனத்தின் மின்சார சேவையைப் பயன்படுத்தும் குடியிருப்பு பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணக் கழிவு, இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் தொடரப்படும்.

முன்னதாக, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் வழங்கப்பட்ட கழிவு, தற்போது நாடு முழுவதிலும் உள்ள பயனீட்டாளர்களுக்கு வழங்கவிருப்பதாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர், டத்தோ சம்சுல் அனுவார் நசாரா அறிவித்திருக்கிறார்.

இதனிடையே, தீபகற்ப மலேசியாவில் உள்ள 76 லட்சத்து 60 ஆயிரம் குடியிருப்பாளர்கள், இவ்வாண்டு அக்டோபர் முதாம் தேதி தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் தொடர்ந்து, இரண்டு விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவைப் பெறுவர் என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட PRIHATIN எனும் பரிவுமிக்க மக்கள் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.