NATIONAL

நான்கு மொத்தச் சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை- கெபிடிஎன்ஹெப்

9 ஜூன் 2020, 4:44 AM
நான்கு மொத்தச் சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை- கெபிடிஎன்ஹெப்

ஷா ஆலம், ஜூன் 9:

சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு, (கேபிடிஎன்ஹெப்) நான்கு ஸ்ரீ கெம்பாங்கான் சிலாங்கூர் மொத்த சந்தை வர்த்தகர்கள் மீது நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது எடை மொசடி மற்றும் அளவிடும் சாதனங்களுக்காக இரண்டு வர்த்தகர்கள் மீது எடை மற்றும் அளவீட்டு சட்டம் 1972 இன் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக சிலாங்கூர் கேபிடிஎன்எச்இபி தெரிவித்துள்ளது.

" இதற்கிடையில், விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டம் 2011 இன் கீழ் மேலும் இரண்டு வர்த்தகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. எனவே, பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் உத்தரவுகளை கடைபிடிக்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்துப் படுகிறது. இதற்கிடையில், பயனீட்டாளர்கள்  வாங்குவதற்கு முன் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வதற்கு அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.