NATIONAL

மெப்ஸ் பணப் பட்டுவாடா சேவைக் கட்டணம் இல்லை- இஸ்மாயில் சப்ரி

1 ஜூன் 2020, 7:07 AM
மெப்ஸ் பணப் பட்டுவாடா சேவைக் கட்டணம் இல்லை- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஜூன் 1:

நாடு முழுமையிலும் செயல்படும் மெப்ஸ் பணப் பட்டுவாடா இயந்திரத்தில் பணத்தை மீட்டுக் கொள்வதற்காக வசூலிக்கப்படும் ஒரு ரிங்கிட் கட்டணத்தை அரசாங்கம் அகற்றியிருந்தது. அச்சலுகை, நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிகேபிபி காலக்கட்டமான ஜூன் 9-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி வரை, அமல்படுத்தப்பட்டு வரும் இச்சலுகையை மாற்றக் கோரி, வங்கி தரப்புகளிடம் இருந்து எந்தவொரு கலந்துரையாடலோ விண்ணப்பமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் இஸ்மாயில் சப்ரி சுட்டிக் காட்டினார். திங்கட்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.