NATIONAL

1,986 பல்கலைக் கழக மாணவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது !!!

31 மே 2020, 8:39 AM
1,986 பல்கலைக் கழக மாணவர்களை திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது !!!

ஷா ஆலம், மே 31:

1,986 பல்கலைக்கழக மாணவர்களை திருப்பி அனுப்பும் பணியை உயர்கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். நோன்பு பெருநாள்  கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு முன்னர்  56,445 பல்கலைக்கழக மாணவர்களை அமைச்சு திருப்பி  அனுப்பியுள்ளதாக டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

" இன்று, கோலாலம்பூர்-கோத்தா கினபாலு (165 மாணவர்கள்), கூச்சிங்-கோத்தா கினாபாலு (166 மாணவர்கள்) மற்றும் கோத்தா  கினாபாலு-கோலாலம்பூர் (27 மாணவர்கள்) ஆகிய மூன்று விமானங்கள் வழியாக 358 மாணவர்கள் அனுப்பப்பட உள்ளனர்" என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களை திருப்பி அனுப்பும்  செயல்முறை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.