NATIONAL

ஸ்ரீ கெம்பாங்கான் கோயில் திருமணம் தொடர்பில் காவல்துறை வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளது !!!

26 மே 2020, 2:02 PM
ஸ்ரீ கெம்பாங்கான் கோயில் திருமணம் தொடர்பில் காவல்துறை வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளது !!!

ஷா ஆலம், மே 27:

ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண நிகழ்ச்சி தொடர்பாக 33 பேரின் வாக்குமூலத்தை சிலாங்கூர் காவல் துறை பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. கோயிலின் தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனிநபர்களிடமிருந்து இந்த அறிக்கைகள் பெறப்பட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.

“தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் விதிமுறைகள் 2020- இன் கீழ் காவல் துறையினர் விசாரணை தொடங்கி உள்ளனர். தவிர, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் கீழ் விசாரணையும் நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு கோயிலில் திருமண நிகழ்ச்சியை நடத்தியதாக இணைய செய்தித்தளம் குறிப்பிட்டிருந்தது. அதில் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.