NATIONAL

குடிபோதையில் கட்டுக்கடங்காமல் பொது மக்கள் மீது வாகனத்தை மோதியவர் கைது !!!

23 மே 2020, 1:02 AM
குடிபோதையில் கட்டுக்கடங்காமல் பொது மக்கள் மீது வாகனத்தை மோதியவர் கைது !!!

ரவாங், மே 23:

குடிபோதையில் ஒரு ஆடவர் கட்டுக்கடங்காமல் ஐந்து நபர்களை தனது வாகனத்தை கொண்டு இடித்து தள்ளி காயப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ நூர் அஸாம் ஜமாலூடின் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று மாலை ரவாங் புக்கிட் செந்தோசா அங்காடி வியாபாரத் தளத்தில் நடந்துள்ளது.  32 வயதுடைய டயர் மொத்த வியாபாரியான அந்த ஆடவர் குடிபோதையில் அங்காடி கடைகள் மற்றும் பொது மக்களை இடித்து தள்ளிய நிலையில் ஐந்து நபர்களுக்கு பலத்த காயம் அடைந்தனர்.

சம்பந்தப்பட்ட நபர் இதற்கு முன் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை என்று நூர் அஸாம் கூறினார். அவர் மீது குற்றவியல் சட்டத்தின்படி செக்சன் 307 மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987, செக்சன் 42(11) ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குவார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.