NATIONAL

கோவிட்-19: ஆறு நாடுகளில் இருந்து திரும்பிய 25 நபர்களுக்கு நோய் தொற்றியது !!!

30 ஏப்ரல் 2020, 3:21 PM
கோவிட்-19: ஆறு நாடுகளில் இருந்து திரும்பிய 25 நபர்களுக்கு நோய் தொற்றியது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 30:

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 25 மலேசியர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளது என்று சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் ஆறு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆகும்.

" 25 நோயாளிகளில், 12 பேர்கள் ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து (6), சிங்கப்பூர் (3), நார்வே (2), இந்தோனேஷியா மற்றும் இங்கிலாந்து முறையே ஒரு நோயாளிகள் ஆகும்," என்று சுகாதார அமைச்சு அதன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

இன்று மலேசியாவில் மொத்தம் 57 கோவிட்-19 புதிய நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 25 இறக்குமதி சம்பவங்கள் ஆகும். நேற்று 94 சம்பவங்கள் ஏற்பட்ட வேளையில் 72 இறக்குமதி சம்பவங்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.