NATIONAL

3841 உயர்கல்வி மாணவர்கள் இன்று வீடு திரும்புவர்- உயர்கல்வி அமைச்சு

30 ஏப்ரல் 2020, 8:26 AM
3841 உயர்கல்வி மாணவர்கள் இன்று வீடு திரும்புவர்- உயர்கல்வி அமைச்சு

புத்ராஜெயா, ஏப்ரல் 30:

சுமார் 3,841 உயர்கல்வி மாணவர்கள் மாநிலங்களுக்குள்ளேயே அவரவர் வீடுகளுக்குத் இன்று திரும்ப இருப்பதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இந்த இயக்கம் நான்கு மண்டலங்களை உள்ளடக்கியது. அதாவது கிழக்கு மண்டலத்திற்குள்ளே (பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானு), பேராக் மண்டலத்திலுள்ளே, தெற்கு மண்டலத்திற்குள்ளே (நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் மலாக்கா) மற்றும் சரவாக் மண்டத்திற்குள்ளேயே மாணவர்கள் அனுப்பப்படுவார்கள்.

குடும்ப பிரதிநிதிகள் மாணவர்களை காவல் துறை தலைமையகம்  அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வர வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். வருகை தரும் இடத்தில் மாணவர்களை அழைத்துச் செல்ல முடியாத குடும்பங்களுக்கு, மாணவர்களை சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று இன்று புத்ராஜெயாவில்  நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் கூறினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.