NATIONAL

கோவிட்-19: கிளந்தான் மாநிலம் புதிய பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

29 ஏப்ரல் 2020, 5:42 AM
கோவிட்-19: கிளந்தான் மாநிலம் புதிய பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 29:

நேற்று 12 மணி வரையில் எந்த ஒரு கோவிட்-19 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்படாததால் கிளந்தான் மாநிலம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது என சுகாதார அமைச்சின் தேசிய நெருக்கடி நடவடிக்கை மற்றும் தயார்நிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இன்னும் முழுமையாக நோய் கட்டுபாட்டில் இருந்து மீண்டு விட்டதாக கருதிவிட முடியாது என அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இரண்டு வாரங்களில் தொடர்ந்து எந்த ஒரு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால் மட்டுமே ஒரு மாநிலம் கோவிட்-19 நோயில் இருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப் முடியும். இதற்கு முன்பாக, கிளந்தானில் ஒன்பது மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.