NATIONAL

அனுமதிக்கப்பட்ட துறைகள் நாளை முதல் எந்த தடையுமின்றி செயல்படலாம் !!!

28 ஏப்ரல் 2020, 2:01 PM
அனுமதிக்கப்பட்ட துறைகள் நாளை முதல் எந்த தடையுமின்றி செயல்படலாம் !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 28:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொழில்துறைகள் எந்த தடையுமின்றி செயல்படலாம் என்று மூத்த அமைச்சர் (பொருளியல்) டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பிகேபி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலகட்டங்களில் அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்களின் வேலைகளை நாளை முதல் தொடங்கலாம் என அவர் தெரிவித்தார். ஆனாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

" நிர்ணயித்த வழிமுறைகளை கடை பிடிக்க தவறிய நிறுவனங்களின் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும். மேலும், மேற்கண்ட நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.